Tuesday 11 February 2014

வெங்காயத்தின் சில மருத்துவ குணங்கள்:-

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்… அதில் உள்ள ”அலைல் புரோப்பைல் டை சல்பைடு” என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.

*முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான்


Friday 7 February 2014

‘பெண்’ எனும் தொழிற்சாலை?

பெண்’ எனும் தொழிற்சாலை?
சிறுநீரகம், கருமுட்டை, கர்ப்பப் பை...
நன்றி :  பாரதி தம்பி, விகடன்....
2006-ம் ஆண்டு சகுந்தலாவுக்குத் திருமணமானபோது 20 வயது. தறிப் பட்டறையில் தன்னுடன் பணிபுரிந்த நவராஜை, காதல் திருமணம் செய்துகொண்டார். வெவ்வேறு சாதி என்பதால், இரு தரப்பு எதிர்ப்புகளையும் மீறித்தான் திருமணம் நடந்தது. மகிழ்ச்சியான மண வாழ்க்கையின் மூன்றாவது மாதத்தில் நவராஜ் மெள்ள ஆரம்பித்தான். தனக்குத் தெரிந்த ஒருவர் இரண்டு சிறுநீரகங்களும் பழுதாகி சாகக்கிடப்பதாகவும், 'நீ ஒரு சிறுநீரகத்தைத் தானமாகத் தந்து உதவினால், அவர் உயிர் பிழைப்பார்’ என்றும் சகுந்தலாவிடம் சொன்னான். இரக்க உணர்வு மிகுந்த பழங்குடிக் கலாசாரத்தில் வளர்ந்த சகுந்தலா, தன் கணவனின் வேண்டுகோளை ஏற்றார். குமாரபாளையத்தில் இருந்து, கோயம்புத்தூர் அழைத்துச் செல்லப்பட்டு சகுந்தலாவின் வலது பக்கச் சிறுநீரகம் அகற்றப்பட்டது. சிகிச்சை முடிந்ததும் தரகர்கள், நவராஜிடம் 50 ஆயிரம் ரூபாய் பணத்தைத் தந்தபோதுதான், அது தானம் அல்ல, வியாபாரம் என்று சகுந்தலாவுக்குப் புரிந்தது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு... சகுந்தலாவிடம் இன்னொரு 'தானத்துக்கு’ அடிபோட்டான் நவராஜ். இந்த முறை குரலில் பணிவு இல்லை. அதிகாரம் எஞ்சியிருந்தது. செயற்கைக் கருத்தரித்தல் மையங்களில் குழந்தையின் கருவை உருவாக்கத் தேவைப்படும் கருமுட்டைகளை சகுந்தலா தானமாகத் தர வேண்டும் என்றான் நவராஜ். 'மாதவிடாய் நேரத்துல வீணாப் போறதுதானே... அதை வெச்சு ஒரு பெண்ணுக்குக் குழந்தை பாக்கியம் கிடைச்சா நல்லதுதானே?’ என்றான். இந்த முறை இவன் இதற்காகப் பணம் பெறுவான் என்பது தெரிந்தும், வேறு வழியின்றி அதற்குச் சம்மதித்தார் சகுந்தலா. ஈரோடு தனியார் மருத்துவமனையில் 10 நாட்கள் ஹார்மோன் ஊசி போடப்பட்டு கருமுட்டைகள் சேகரிக்கப்பட்ட பின்பு அனுப்பிவைக்கப்பட்டார். இதற்காக நவராஜ் பெற்ற தொகை, 15 ஆயிரம் ரூபாய். இப்படி ஒன்றல்ல... இரண்டல்ல... கடந்த ஐந்து ஆண்டுகளில் 18 முறை சகுந்தலாவை கருமுட்டை வியாபாரத்தில் ஈடுபடுத்தியுள்ளான் நவராஜ்.

ஆண்கள் காணும் சுய இன்பம்: ஏன் உடல் களைப்படைகிறது !

தற்போதைய காலகட்டத்தில், ஆண்கள் சுய இன்பம் காண்பது என்பது சர்வசாதாரணமாகி விட்டது. உண்மையில் சொல்லப்போனால் மணம் முடித்தவர்கள், இளைஞர்கள், மற்றும் வயதான ஆண்கள் எனப் பலரும் சுய இன்பத்துக்கு அடிமையாகிவிட்டனர் என்று தான் சொல்லவேண்டும். வீட்டில் உள்ள பல ஆண்கள், TV மற்றும் இன்ரர் நெட் வழியாக ஆபசப் படங்களையும் காட்சிகளையும் பார்த்து சுய இன்பம் காண்பது வழக்கம். இது ஒரு நோய் போலவே ஆகிவிட்டது. பழைய காலத்தில் கூறுவதுபோல, சுய இன்பம் அனுபவிக்கும் ஆண்கள் சக்த்தியை இழப்பதில்லை. இது புது ஆய்வின் கண்டுபிடிப்பு. விந்து என்பது மிகச் சிறிய அளவில் (150 மி.கிராம் அளவு) சர்க்கரை சத்துள்ள, மூக்குச் சளி போன்ற ஒரு திரவம் தான். இதனை உடல் இழப்பதனால் ஏதும் நடந்துவிடப் போவது இல்லை !

Thursday 6 February 2014

வேலைகளுக்கு இடையே செய்யும் எளிய பயிற்சி


அதிக நேரம் கம்ப்யூட்டரில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு அடிக்கடி களைப்பு ஏற்படும். அவர்கள் வேலையில் சிறிது இடைவெளி கிடைக்கும் போது சில எளிய பயிற்சிகளை செய்து வந்தால் களைப்பு நீங்கி சுறுசுறுப்பு கிடைக்கும்.. இந்த வகையில் சில எளிய பயிற்சிகள் இங்கு உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம். 

முதுகுவலியை போக்கும் பயிற்சி...

கம்ப்யூட்டரில் வெகு நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு முதுகு வலி பிரச்சனை இருக்கும். மேலும் தொடர்ச்சியாக இருசக்கர வாகனம் ஒட்டுபவர்களும் முதுகு வலியால் அவதிப்படுகின்றனர். முதுகு வலி அதிகம் பெண்களையே தாக்குகிறது. 

நட்பு காதலாக மாறிவிட்டது என்பதற்கான அறிகுறிகள்!!!

இவ்வுலகில் நட்பு இல்லாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அதேப்போல் காதல் இல்லாதவர்களும் இருக்கவேமாட்டார்கள். ஆனால் இந்த நட்புக்கும் காதலுக்கும் ஒரு தொடர்பு உள்ளது. அது என்னவென்றால், பல காதல்கள் நட்பிலிருந்து தான் ஆரம்பமாகிறது. அதிலும் ஒரு பெண்ணும் ஆணும் மிகவும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டால், நாளடைவில் அந்த நட்பானது காதலில் வந்து, திருமணத்தில் முடிந்து விடுகிறது.

கள்ளத் தொடர்பு கொண்டுள்ள துணையை எதிர்கொள்ள சில வழிமுறைகள்!!!

துரோகத்தை எதிர்கொள்வது மிகவும் கொடுமையான விஷயம். அதுவும் உங்களுடைய துணையாக இருப்பவர், இது நாள் வரையிலும் உங்களை வளர்த்தெடுத்த கொள்கைகள் மற்றும் புனிதமான உறவுகளுக்கு துரோகம் செய்து விட்ட நேரங்களில் அது மிகவும் தாங்க முடியாத விஷயமாக இருக்கிறது. மேலும் உங்களுடைய துணைவரை மறுபடியும் நம்பலாமா வேண்டாமா என்ற குழப்பமும் உங்களை ஆட்கொள்ளும். பாதுகாப்பின்மையும், குழப்பமும் எங்கெங்கிலும் தலைதூக்கியிருக்கும் மற்றும் இந்த நிலையிலிருந்து நீங்கள் வெளியேற முடியுமா என்பதும் கூட பதில் தெரியாத கேள்வியாக இருக்கும். 'அவள்/அவர் ஏன் உங்களை ஏமாற்றினார்?' என்ற கேள்வி உங்களை தொந்தரவு செய்து கொண்டே இருக்குமாதலால், அதற்கு பதில் கிடைக்கும் வரை உங்கள் விழிகள் மூடாது.

பெண்ணும் பெண்ணும் உறவு கொள்வதற்கான காரணங்கள் என்ன?

இயல்பாக ஒரு ஆண் மீது பெண்ணுக்கோ, பெண் மீது ஆணுக்கோ ஈர்ப்பு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் காதல் வயப்பட்டு, காம ஆட்டம் ஆடுவது என்பது இயல்பானது. ஆனால் மாறாக இரு பெண்களுக்கு ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு ஏற்பட்டு காதல் வயப்பட்டு செக்ஸ் உறவில் ஈடுபடும் லெஸ்பியன் கலாச்சாரம் இன்றைக்கு பெருகிவிட்டது. இன்றைய காலகட்டங்களில் 2 ஆண்கள் ஒருவருக்கொருவர் இணைவதும், பெண்ணும் பெண்ணும் இணையும் கலாச்சாரம் இன்றைக்கு அதிகரித்து வருகிறது. பெண்கள் பிற பெண்களிடம் இருந்து 10 லிருந்து 15 சதவிகிதம் வரை உணர்ச்சி பெற்றிருக்கின்றனராம்.
வெளிநாட்டில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பிற பெண்களின் மீது ஈடுபாடு கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் பங்கேற்ற பெண்களில் 45 சதவிகித பெண்கள் பிற பெண்களை முத்தமிட்டுள்ளனராம். 50 சதவிகித பெண்கள் பிற பெண்களுடன் உறவில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். போய்சே பல்கலைக்கழகத்தின் உளவியல்துறை பேராசியர் எலிசபெத் மோர்கன் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
பெண்கள் ‘லெஸ்பியன்’ உறவை நாடிச் செல்வதற்கான காரணம்

Tuesday 4 February 2014

மனிதன் சுவாசித்தால்

சித்தரியல்படி நாளொன்றுக்கு மனிதர் விடும் மூச்சுக்காற்றின் எண்ணிக்கை 21,600. இதில் உட்சுவாசம் 10,800 மற்றும் வெளிச்சுவாசம் 10,800. சாதாரணமாக இருமணி இடைவெளியில் மூச்சான வலதுநாசி, இடதுநாசியாக மாறிமாறி நடைபெறுகிறது.

திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு

திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு என்பது ஆண்-பெண் மத்தியில் இன்று சகஜமாகி வருகிறது. திருமணமான பெண்களில் சுமார் ஐம்பது சதவிகிதத்தினர் தன் கணவன் அல்லாத வேறு ஆணுடன் உறவு கொள்வதும், அதற்காகத் தம் திருமண வாழ்க்கையையே இழக்கத் தயாராக இருப்பதும் சர்வ சாதாரணமாகி விட்டது.

ஆண்களின் ஆண்மையை அதிகரிக்க சில முக்கியமான டிப்ஸ்…

கருவுறுதலில் ஏற்படும் பிரச்சனை பெண்களுக்கு மட்டும் ஏற்படுவதில்லை, ஆண்களுக்கும் தான் ஏற்படுகிறது. ஆனால் அத்தகைய பிரச்சனை தற்போது இந்தியாவில் ஆண்களிடையே அதிக அளவில் உள்ளது என்று தற்போதைய ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு காரணம் ஆண்களின் ஸ்பெர்ம்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதற்கு ஆண்களது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மன அழுத்தம் மற்றும் தம்பதியரிடையே சரியான அன்பு வெளிப்படுத்த முடியாதது என்பனவையே காரணங்களாக இருக்கும். ஆகவே இத்தகையவற்றை சரியாக போக்கி, ஸ்பெர்ம்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சில டிப்ஸ் இருக்கிறது.

சுய இன்பம்: சரியா? தவறா?

டீன் ஏஜ் தொடங்கும்போதே, எட்டாம் வகுப்பிலேயே பெரும்பாலான சிறுவர்கள் சுய இன்பம் அனுபவிக்கத் தொடங்கி விடுகிறார்கள். உலகத்தின் எல்லா சமூகங்களிலும் ஒரு கால கட்டத்தில், சுய இன்பம் பற்றி அறிவியல் ஆதாரம் இல்லாத கருத்துக்கள் நிலவியிருக்கின்றன. மனித உடற்கூறு பற்றிய அறிவு பெருகப் பெருகத்தான், அவற்றில் பல கருத்துக்கள் தவறானவை என்ற விழிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா?

பல போலி டாக்டர்கள் சுய இன்பம் செய்தால் ஆண்மை போய் விடும், தனது மனைவியை திருப்திபடுத்த முடியாது, ஆணுறுப்பு சிறுத்து விடும், சுருங்கிவிடும் என்று பத்திரிகைகளிலும், டி.வி சேனல்களிலும் விளம் பரம் செய்கிறார்கள். இதனால் மக்கள் சுயஇன்பத்தைப் பற்றி தேவையற்ற பயத்தை கொண்டுள்ளார்கள்.

Monday 3 February 2014

ஜென் : சிறுகதை

1. ஜென் குரு பங்கேயின் மாணவன் ஒருமுறை அவரிடம் வந்து "மாஸ்டர், எனக்கு அடக்க முடியாத கோபம் வருகிறது. இதை எப்படி குணப்படுத்துவது?" என்று கேட்டான். அப்படியெனில் "ஏதோ ஒன்று உன்னை பயங்கரமாக ஆட்டி வைக்கிறது. சரி, இப்பொழுது அந்த அடக்க முடியாத கோபத்தை காட்டு" என்று சொன்னார். அதற்கு மாணவன் "அதை இப்பொழுதெல்லாம் காட்ட முடியாது" என்றான். "வேறு எப்பொழுது காட்ட முடியும்?" என்று குருவும் கேட்டார்.

ஜென் : சிறுகதை

1. ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு கண் பார்வை கிடையாது. அப்போது அந்த வழியாக வந்த ஒருவன், " ஏய் கிழவா, யாராவது இந்த வழியாக சென்றார்களா?" என்று மரியாதையின்றி அதிகாரத்துடன் கேட்டான். அதற்கு அந்த துறவி "அப்படி யாரும் சென்றதாக தெரியவில்லை" என்று சொன்னார். சிறிது நேரம் கழித்து, மற்றொருவன் வந்து "ஐயா, இதற்கு முன் யாராவது சென்றார்களா?" என்று கேட்டார்.

பிரச்சினைகளைத் தீர்க்க 3 வழிகள்

தவறிழைத்த அரசனொருவனைச் சினங்கொண்ட முனிவர் ஒருவர்,''நீ நாளையே பன்றியாகிச் 
சாக்கடையருகே திரியக்கடவாய்'' என்று சபித்துவிட்டார். பன்றியாக மாறிவிடும் கேவலத்தை விரும்பாத அரசன் தன் மகனை அழைத்து, ''நான், நாளை பன்றியாக மாறிய மறுகணமே என்னை வாளால் வெட்டிக்கொன்றுவிடு!'' என்று கேட்டுக்கொண்டான். 

எதிர்பார்த்தபடி மறுநாள் காலை அரசன் பன்றியானான். மகன் சோகத்துடன் பன்றியான தன் தந்தையை வெட்ட வாளை வீசும்போது,'' மகனே! பொறு! இன்னும் ஒருமாதம் பன்றிவாழ்க்கை எப்படியிருக்கிறது என்று பார்த்துவிட்டுச் சாகிறேன். அடுத்த மாதம் இதே நாளில் என்னைக்கொன்று விடு'' என்றான்.

தன்னம்பிக்கை கதைகள் : கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.
தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.
‘ஈ மெயிலா? எனகக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லயா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.

தன்னம்பிக்கை கதைகள் : எவ்வளவு வெயிட்?

வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார்.
மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.
“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”
100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.

தன்னம்பிக்கை கதைகள் : சிறிய தூண்டில்

நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்றார் ஒருவர்.
அங்கே ஒரு விற்பனை நிலையத்தில்....
"சேல்ஸ் துறையில் உனக்கு முன் அனுபவம் இருக்கிறதா?" மேனேஜர் கேட்க,
"நான் எனது நாட்டில் சேல்ஸ்மேனாகத்தான் வேலை பார்த்தேன்" என்றார் நம்மாளு.
"அப்படியானால் உனக்கு நான் வேலை தருகிறேன். நாளை முதல் நீ வேலையைத் தொடங்கலாம். கடை மூடும்பொழுது நீ எப்படி வேலை பார்த்தாய் எனப் பார்ப்பதற்கு நான் வருவேன்"

தன்னம்பிக்கை கதைகள் : பயம்! பயம்! பயம்!

ஒரு ஞானியின் தியானம் கலைந்தபோது ஒரு சுண்டெலி ஞானி முன் வந்தது. சுண்டெலியை பார்த்து ஞானி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். பூனையை கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றிவிட்டால், உங்களுக்கு புன்னியம் உள்ளது என்றது எலி. ஞானி, எலியை பூனையாக மாற்றினார். 

தன்னம்பிக்கை கதைகள் : வறுமை

சோம்பலால் வறுமையில் வாடிய ஒருவன் ஒருமகானைச் சந்தித்து, தனது வறுமையைப் போக்கும்படி வேண்டினான்.
அவனது சோம்பலை உணர்ந்த அந்த மகான் அவனுக்கு அதை உணர்த்த ஒரு கதையைக் கூறினார் -

தன்னம்பிக்கை கதைகள் : காது கேட்காத தவளை

மூன்று தவளைகள் ஒரு மலையின் உச்சிக்கு ஏறுவதற்கு தயாராகின.
அவை மலையேற ஆரம்பிக்கும் போது பார்வையாளராக இருந்த ஒருவர் "இவளவு உயரமான மலையில் ஏறும்போது வழியில் கற்கள் தடக்கி விழுந்தால் அவ்வளவுதான்" என்றார்.
உடனே ஒரு தவளை மலை ஏறுவதை நிறுத்தி விட்டது.

தொடையில் உள்ள அதிகப்படியான சதை குறைய பயிற்சி

தற்போதுள்ள வேலை பளுவின் காரணமாக அனைவராலும் ஜிம்முக்கு சென்று பயிற்சி செய்ய முடிவதில்லை. ஒரு சிலருக்கு தொடைப்பகுதியில் அதிகப்படியான சதை இருக்கும். அதற்காக அவர்கள் ஜிம்முக்கு சென்று பலவிதமான பயிற்சிகளை மேற்கொண்டிருப்பார்கள். 
பயிற்சி செய்ய ஆரம்பித்த சில நாட்களில் தொடைப்பகுதியில் சதை குறைய ஆரம்பிக்கும். சிலருக்கு தொடர்ந்து ஜிம்முக்கு போக முடியாது. அதனால் பயிற்சி தொடர முடியாத போது முன்பு இருந்ததை விட அதன் பின்னர் அதிகளவு எடை கூடும். 


தொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு.

இளைத்தவன் எள்ளு விதைப்பான்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி.இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு - களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள்.

பயன் தரும் பச்சிலை அருகம்புல்!

நம்மில் பலர் அருகம் புல்லை பூஜையறையில் வைத்து பயன்படுத்துவதுண்டு ஆனால் அருகம்புல்லின் மருத்துவப்பெருமை தெரிந்தவர்கள் நம்மில் எத்தனை பேர் உள்ளனர். நமது உடலில் ஊட்டச்சத்து பெருகவேண்டும் என்பதற்காக ஹார்லிக்ஸ் ஓவல்டின் போன்ற பல வகையான பானங்களை சாப்பிடுகிறோம். ஆனால் அருகம்புல்லே அற்புதமான ஊட்டச்சத்து மூலிகை என்பது நம்மில் பலருக்க தெரிந்திருக்காது.

நோய்க்கு மருந்தாகும் கடம்பு

இந்தியாவில் உள்ள தொன்மையான மரங்களில் முக்கியமானது... கடம்பு. இந்தியாவின் ஒற்றுமைக்கே இது ஓர் உதாரணமாகத் திகழ்கிறது என்றுகூட சொல்லலாம். ஆம்... தமிழ், இந்தி, சமஸ்கிருதம் என இந்தியாவில் பேசப்படும் பல்வேறு மொழிகளிலும் 'கடம்பு’ என்றே இது அழைக்கப்படுகிறது.

புதினா (Mentha spicata) ஒரு மருத்துவ மூலிகையாகும்.

புதினா கொத்தமல்லி கருவேப்பிலை மூன்றையும் தினசரி தவறாது உணவில் சேர்த்து வரவேண்டும். எளிதில் கிடைப்பதால் இவற்றின் நன்மை பலருக்கும் தெரிவதில்லை.
புதினா (Mentha spicata) ஒரு மருத்துவ மூலிகையாகும். உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம்...ஆனால் இதன் மருத்துவ பயன்களை தெரிந்துகொண்டால் தொடர்ந்து பயன்படுத்துவோம்.

வாழை இலையில் நாம் சாப்பிடுவதால் என்ன என்ன பயன்கள் ஏற்படுகிறது !!

இன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம்.
அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது. வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன? பார்ப்போம்…

தாது நஷ்டத்தைப் போக்க ஓரிதழ்தாமரை கசாயம் சிறந்தது.



இளம் வயது ஆண்பிள்ளைகளுக்கு பருவ வயது வளர்ச்சியின் போது சில பாதிப்புகளால் இரவில் தூங்கும்போது விந்து வெளியேறும். இதனால் தாது நஷ்டப்பட்டு உடல் தேறாமல் நோஞ்சான் போல் காணப்படுவர். இவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை இடித்து தேன் அல்லது பாலில் கலந்து இரவு படுக்கைக்கு செல்லும்முன் சாப்பிட்டு வந்தால் இழந்த தாதுவை மீட்கலாம்.

செம்பருத்தி நீர்:


செம்பருத்தி பூ நீர் இதய சுவர் ஓட்டை, இதய வால்வு, தேய் மானம், வழுக்கை, இரத்த சோகை ஆகியன வராமல் தடுக்கிறது. இது மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது. குடல் இறக்கம், கர்ப்பப்பை இறக்கம் ஏற்படாதும் தடுக்கிறது.

ஆண்மையை பெருக்கும் அமுக்கிரா கிழங்கு !!

ஆண்மையைசெயல்பட வைக்கும் மூலிகை வேர்தான் அஸ்வகந்தா என்று அழைக்கப்படும் அமுக்கிரா கிழங்கு ஆகும். 

பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம் தெரியுமா?




ஓம் என்ற மந்திரத்திற்கு பிறகே கணேசாய நமஹ, ராயணாய நமஹ, சிவாயநம என்று மந்திரங்களைச் சொல்கிறோம். இதில் ஓம் என்பதை அ, உ, ம் என்று பிரிக்க வேண்டும். அதாவது அ, உ, ம் என்ற எழுத்துகளை இணைத்தால் ஓம் என்று வரும். அ என்பது படைப்பதையும், உ என்பது காப்பதையும், ம் என்பது அழிப்பதையும் குறிக்கும். அ என்பது முதலெழுத்து. இது வாழ்வின் ஆரம்பத்தை குறிக்கிறது. உ என்பது உயிரெழுத்துக்களின் வரிசையில் ஐந்தாவதாக வருகிறது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து உறுப்புகளை மனிதர்கள் அடக்கி வைத்துக் கொண்டால், ஆயுள் அதிகரிக்கும் என்பதும், ஆயுள் கூடக்கூட, மனிதர்கள் துவங்கியது தடையின்றி நடக்கும் என்பதும் தெரிந்த விஷயம். மேலும், உ என்பது காத்தல் எழுத்து என்பதால், இறைவன் நம்மை பாதுகாப்பதைக் குறிக்கிறது. நம் செயல்கள் தடையின்றி நடக்க வேண்டுமானால் நமக்கொரு பாதுகாப்பு வேண்டும். இதற்காகவே உ என எழுதுகிறோம்.

தாஜ்மஹாலின் இருண்ட பக்கங்கள்-வெளிவராத மர்மங்கள்..!

முகலாயமன்னர் ஷாஜகானால் தனது காதல் மனைவி மும்தாஜ் நினைவாக கட்டபட்ட சமாதிதான் தற்போதைய உலக அதிசயங்களில் ஒன்றான ''தாஜ்மஹால்'' என்று வரலாறு தெரிவிக்கிறது. 
ஆனால் தாஜ்மஹால் என்பது ''தேஜாமஹாலயா'' என்றழைக்கப்பட்ட பழைய சிவன் கோவில்தான் என்கிற புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. 

Sunday 2 February 2014

கஞ்சா, மதுவுக்கு சமமானது ஃபேஸ்புக். அதிர்ச்சி ஆய்வு

'சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ஆர்குட், டிவிட்டர் போன்ற இணையதளங்களில், இளைஞர்கள் பலரும் மணிக்கணக்கில் மூழ்கிக் கிடப்பது நினைவாற்றல் திறன் முற்றிலும் பாதிப்புக்குள்ளாவதோடு உடலுக்கும் தீங்கும் ஏற்படும்’ என்று எச்சரிக்கை செய்துள்ளது சமீபத்திய ஆய்வு ஒன்று.  இதனால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றன.  உதாரணத்துக்குச் சில சம்பவங்கள்:  

ஆபீஸ் பாலிடிக்ஸ்: சிக்காமல் சமாளிப்பது எப்படி?

இந்த ஆபீஸ், அந்த ஆபீஸ் என்கிற எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லா ஆபீஸ்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது ஆபீஸ் பாலிடிக்ஸ். இந்த பாலிடிக்ஸில் நாம் சாதுர்யமாக நீந்தினால் தற்காலிகமாக பதவி உயர்வு, சம்பள உயர்வு என பல நல்ல விஷயங்கள் நமக்கு கிடைக்கலாம். ஆனால், சூழல் மாறினால் பதவி உயர்வும் சம்பள உயர்வும் போய், தண்ணி இல்லாத காட்டுக்கு வேலை மாற்றல் அல்லது வேலையையே இழக்கவேண்டிய கட்டாயமும் ஏற்படலாம். இந்த ஆபீஸ் பாலிடிக்ஸில் சிக்காமல் இருப்பது எப்படி என்பதைச் சொல்கிறார் போலாரிஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டாளர் பாலமுருகன்.

பெண்ணுங்க மூட்ல இருக்காங்களான்னு தெரிஞ்சுக்கிறதுக்கு இதை படியுங்கள்.

ஆம்பளைஸுக்கு எல்லாமே ஈசிதான். பட்டென்று தேங்காய் உடைப்பது போல போட்டு உடைத்து விட்டுப் போய் விடுவார்கள் – அக்கம்பக்கம், இங்கிதம், சூழ்நிலை, வெட்கம் இதெல்லாம் ரொம்பப் பார்ப்பதில்லை. ஆனால் பெண்கள் அப்படியில்லை.

ஆண்களுக்கு எப்போதுமே பெண்களின் உதடுகளில் ஈர முத்தம் பிடிக்கிறதா ?...அதிரடி ஆய்வு.

ஆண்களுக்கு எப்போதுமே உதடுகளை குளிப்பாட்டி எடுக்கும் அளவுக்கு முத்தமிடுவதான் பிடிக்கிறது. இதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்பதை சிபிஐ வைக்காமலேயே ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார்கள்.
 

பெண்கள் இரவில் மட்டும் உறவை அதிகமாக விரும்புவது ஏன்?

காலையில் எழும்போது வெளியில் சூரியனின் வருகை, ஜன்னலை திறக்கும் போது நம்மை வருடும் இதமான காற்று, ஜன்னல் வழியாக ஊடுறுவி வரும் மென்மையான வெளிச்சம், உங்கள் துணை படுக்கை அறையில் பரவசமூட்டும் நிலையில் கண்களை மூடி, இதழ்களை லேசாக திறந்து கலைந்து போயிருக்கும் உடைகள் அந்த கோலம், அதற்குப் பின்னால் மறைந்திருக்கும் அழகு, யாராக இருந்தாலும் சத்தமின்றி ரசிக்க வைக்கும்.
 

பெண்களின் பருவ மாற்றங்களும், ஹார்மோன்களும் சிறப்பு.!

உடலின் பல்வேறு பகுதிகளில் சுரக்கும் ஹார்மோன்கள் தான் உடல் எப்போது, எப்படி வளர வேண்டும் என்பதை கட்டுபடுத்துகின்றன. ஒரு பெண்ணுக்கு முதல் மாதவிலக்குக்குச் சற்று முன் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டீரான் என்ற  ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை இரண்டும் பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்கள் ஆகும். இந்த இரு ஹார்மோன்களால் தான் பருவம் அடைகிறாள்.
 
பருவம் அடைந்த பிறகு மாதவிலக்கு நிற்கும் வரை பெண்ணை ஒவ்வொரு மாதமும் கருத்தறிப்பதற்கான வாய்ப்புக்கு ஹார்மோன்கள் தயார்படுத்துகின்றன. இந்த ஹார்மோன்களின் உத்தரவுப் படிதான் ஒவ்வொரு மாதமும் சினைப்பைகள் ஒரு முடடையை வெளியிடுகின்றன.
 ஒரு பென் கருத்தரிக்க இந்த ஹார்மோன்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன. கருத்தறித்த பிறகும் தாய்ப்பால் கொடுக்கும் போதும் ஹார்மோன்கள் பல மாற்றங்களை உண்டாக்குகின்றன. இந்த ஹார்மோன்களால் தான் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது  மாதவிலக்கு ஏற்படுதில்லை. குழந்தை பிறந்த உடனே பாலைச் சுரக்க வைப்பதும் இந்த ஹார்மோன்கள் தான். 

தாம்பத்திய உறவின்போது பெண்கள் அந்த நேரத்தில் நினைப்பது என்ன ?

பெண்கள் மனதில் என்னதான் இருக்கிறது என்பதை யாராலும் அறியமுடியாது. அதனால்தான் கடலின் ஆழத்தை அறிந்து விடலாம், ஆனால் பெண்ணின் மனதை புரிந்து கொள்ள முடியாது என்று ஒரு பழமொழியே உள்ளது. 
அது கிட்டத்தட்ட உண்மை என்று கூடச் சொல்லலாம். ஆனால் தாம்பத்ய உறவின் போது ஒரு பெண் உச்சகட்ட நிலையில் என்ன நினைத்துக் கொண்டிருப்பார் என்பதையும், அவரது மூளையின் உணர்வுகளையும் அறியலாம் என அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஆர்கஸத்தின்போது பெண்களின் மூளை எதை யோசித்துக் கொண்டிருக்கும் என்பதை ஸ்கேனிங் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என்று இதுகுறித்து ஆய்வை மேற்கொண்ட ரட்ஜர்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எம்.ஆர்.ஐ ஸ்கேன் 
இந்த ஆய்வுக்காக எட்டு பெண்களைத் தேர்வு செய்து அவர்களை மூளைக் கட்டிகளை கண்டறியப் பயன்படுத்தப்படும் எம்ஆர்ஐ ஸ்கேனரில் படுக்க வைத்து அவர்கள் மீது போர்வையைக் கொண்டு மூடி பின்னர் அந்தப் பெண்களிடம் ஸ்டிமுலேட்டரைக் கொடுத்து செக்ஸ் உணர்வுக்கு வரவைத்துள்ளனர்.
மூளையின் உணர்ச்சி 
சில பெண்களுக்கு ஐந்து நிமிடத்திற்குள்ளாகவே ஆர்கஸம் ஏற்பட்டது. சிலருக்கு 20 நிமிடம் வரை ஆனது.அந்த சமயத்தில், அவர்களின் மூளை செயல்பாடுகளை ஸ்கேனர் மூலம் ஆய்வு செய்தனர் ஆய்வாளர்கள். ஆர்கஸத்தின்போது ஒவ்வொரு இரண்டு விநாடிக்கு ஒருமுறை எந்த பகுதி ஆக்டிவாக இருக்கிறது என்பதை ஆராய்ந்து படமாக எடுத்துள்ளனர்.
நரம்பு மண்டலம் 
செக்ஸ் உறவின்போது, குறிப்பாக செக்ஸ் உணர்வுகள் உச்சத்தை அடையும்போது பெண்களின் நரம்பு மண்டலம் வழக்கத்தை விட அதி வேகத்தில் துடிக்கும். ஆர்கஸத்தின்போது எந்தப் பெண்ணுமே இந்த நரம்பு மண்டலத் துடிப்பை உணர்வதில்லை
மகிழ்ச்சியான உணர்வு 
செக்ஸ் அல்லாத சமயத்தில் இதுபோல நடந்தால் பெரும் வலியை உணர நேரிடும். ஆனால் செக்ஸின்போது இது தூண்டப்படுவதால் வலிக்குப் பதில் மகிழ்ச்சி உணர்வுதான் கூடும்.
மூளையின் 30 பகுதிகள் 
ஆர்கஸத்தின்போது பெண்களின் மூளையின் 30 பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக உணர்ச்சி, தொடுதல், மகிழ்ச்சி, திருப்தி, நினைவு ஆகிய செயல்களை கட்டுப்படுத்தும் பகுதிகள் இதில் முக்கியமானவை.
மூளை சுறுசுறுப்பு 
ஆர்கஸத்திற்கு 2 நிமிடங்களுக்கு முன்பு உணவு சாப்பிடுவது, மது அருந்துவது போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் மூளைப் பகுதி ஆக்டிவாக இருந்தது தெரியவந்தது.
உணர்ச்சி தூண்டுதல் 
ஆர்கஸம் தொடங்கியவுடனேயே உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதிகள் தூண்டுவிக்கப்பட்டதை அறிய முடிந்தது. பெண்கள் ஆர்கஸத்தை எட்டிய சில விநாடிகளிலேயே தொடுதல் உணர்வைக் கட்டுப்படுத்தும் பகுதிகள், உடலுக்கு சிக்னல்களை கடத்தும் தலாமஸ் போன்றவை பாதிக்கப்பட்டதை அறிய முடிந்தது.
தூண்டப்பட்ட மகிழ்ச்சி 
ஆர்கஸத்தின்போது நினைவை கட்டுப்படுத்தக் கூடிய காடேட் நியூக்ளியஸ், நியூக்ளியஸ் அக்கும்பென்ஸ் (இது மகிழ்ச்சியை தூண்டும் பகுதி) ஆகியவையும் தூண்டப்பட்டதை அறிய முடிந்தது.
மூளையின் கட்டுப்பாட்டு பகுதி 
கடைசியாகத்தான் உடல் சூடு, பசி, தாகம், சோர்வு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் மூளையின் கட்டுப்பாட்டுப் பகுதி அமைந்துள்ள ஹைபோதலாமஸ் தூண்டப்பட்டது.
அதிக ஆர்கஸம்  
இந்த ஆய்வின்போது ஆர்கஸத்தை சந்தித்த பெண்கள் பலமுறை கைகளை மேல உயர்த்தியதாக ஆய்வளர்கள் தெரிவித்தனர். இதன் மூலம் அவர்கள் அதிக அளவிலான ஆர்கஸத்தை விரும்புவதை உணர முடிந்தது. மேலும் ஆர்கஸம் நீண்ட நேரம் நீடிப்பதையே பெண்கள் விரும்புகிறார்கள் என்பதையும் அறிய முடிந்தது. மேலும் தொடர்ச்சியான ஆர்கஸத்தை பெண்கள் வரவேற்பதையும் உணர முடிந்தது என்றனர்.
பெண்களுக்கு அதிகம் 
வழக்கமாக பெண்களுக்கு சராசரியாக 10 முதல் 15 விநாடிகள் வரை உச்ச நிலை நீடிக்கும். அதேசமயம், ஆண்களுக்கு இது 6 விநாடிகளிலேயே முடிந்து போய் விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு (சீமந்தம்) நடத்துவது எதற்காக ?

ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் ஆன பின் சில மாதங்களில் கர்ப்பமானதும்  வளைகாப்பு பெண்களுக்காக கொண்டாடப்பட்டு தான் வருகின்றது. கர்ப்ப காலத்தில் நிறைய சம்பிரதாயங்களும் அதை சார்ந்த கொண்டாட்டங்களும் இருந்து கொண்டு தான் உள்ளன. இவை நமக்குள் உற்சாகத்தையும் கொண்டாடடத்தையும் கொண்டு வரும். கலாச்சாரங்களும் கொண்டாட்டங்களும் நம்முடைய மற்றும் நமது

பெண்கள் பூப்பெய்ததும் அவர்களுக்குப் பதினாறு நாட்கள் தேவையா ? முழு விளக்கம்.

கல்வி மட்டுமே பிரதானம் என எண்ணும் இக்காலத்தில், பருவமடைந்த பெண் குழந்தைகளை ஐந்து அல்லது ஆறு நாட்களிலேயே பள்ளிக்குப் புத்தகச் சுமையுடன் அனுப்பி விடுகிறோமே, இது எந்த அளவில் அவர்கள் உடல், மனநிலையைப் பாதிக்கும்?
அக்காலத்தில் 16 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என முதியோர்கள் கூறியது மருத்துவரீதியாக அவசியமற்றதா? இக் கேள்வியை வெவ்வேறு பிரிவுகளில் உள்ள மூன்று மருத்துவர்களின் முன் வைத்தோம். இதற்கு அவர்கள் அளித்த பதில்:

இளம் வயதில் காம உணர்வை கட்டுப்படுத்த அவசியம் தெரிந்துவைத்திருக்க வேண்டியது..!

எப்போதும் உங்களை பிஸியாகவே உங்களை வைத்திருங்கள். சுய இன்பம் என்பது ஒரு சாதாரண சமாதான நடவடிக்கையே ஆகும். அதனால் இப்பழக்கத்தில் ஈடுபடுவது தவறல்ல. ஆனால்  காம உணர்வை கட்டுப்படுத்த பெண்களும் ஆண்களும் தெரிந்து கொள்வது நல்லது 
இளம் வயதுகாரர்களுக்கு எச்.ஐ.வி தொற்றி எய்ட்ஸ் என்னும் ஆட்கொல்லி நோய் வருவதை பார்க்கும் போது தான் பாலுணர்வு கட்டுப்பாட்டு யுக்திகளின் முக்கியத்துவத்தை நாம் உணருவது கட்டாயமாகிறது. 

ஜப்பானியர்களிடம் கற்க வேண்டிய 10 பண்புகள்

1. ஜப்பானில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு நாளும் பதினைந்து நிமிடங்கள் தங்கள் பள்ளிக்கூடங்கள் மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்கிறார்கள்.
2. ஜப்பானில் நாய் வளர்ப்பவர்கள் அதன் கழிவுகளை அகற்றுவதற்காக வெளியில் செல்லும்போது அதற்கெனவே வடிவமைக்கப்பட்ட பை ஒன்றினை கட்டாயமாக எடுத்துச் செல்வர்.
"பொடுகு" என்றால் என்ன...?
தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக, செதில் செதிலாக உதிரும். இதை தான் நாம் "பொடுகு" என்கிறோம்.
பொடுகு ஏன் வருகிறது...?

வெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான வீட்டு வைத்தியம்.

"அழகானவர்கள்" என்று பேரெடுக்க ஆசைப்படாத மனிதர்களே உலகில் இல்லை. அழகிற்கு ஒரு ஆபத்து என்றால் சிலர் வாழ்க்கையே வெறுத்து விடுவார்கள்.
"வெண்புள்ளி" நோயால் எந்த ஊனமும் இல்லை என்றாலும் எல்லாம் ஊனமடைந்து விட்டதாக மனம் குறுகி விடுவார்கள். மேலும் மனதிற்குள் அழுவது, சிலருக்கு கைவந்த கலை.
"உடல் நோய் உடலை மட்டும் வதைக்கும். உள்ளத்து நோய் உள்ளத்தோடு உடலையும் சிதைக்கும்".


தமிழ் கல்வெட்டுகளுக்கு இன்னும் விடுதலை கிடைத்தபாடில்லை

படித்ததும் குருதி கொதிக்கிறதா? 'நீதான் தமிழன்' சுமார் நூறு வருடங்களாக பதிப்பிக்கப்படாமல் கர்நாடகாவில் சிக்கியுள்ள தமிழ் கல்வெட்டுகளுக்கு இன்னும் விடுதலை கிடைத்தபாடில்லை. கல்வெட்டு தலைமை அலுவலகம் புதிய கட்டடத்திற்கு மாறியதன் விளைவாக ஐம்பது சதவிகிதத்திற்கும் மேலான கல்வெட்டுகள் பதிப்பிக்கப்படா மலே அழிந்து போய் விட்டதாகப் புகார் கிளம்பி உள்ளது. இது குறித்து 'காவிரியும் போச்சு... கல்வெட்டும் போச்சு?' என்ற தலைப்பில் கடந்த 18.06.06 தேதியிட்ட ஜுவி இதழில் வெளியான கட்டுரையின் ஃபாலோ அப் செய்தி... நம் நாட்டை ஆண்ட மன்னர்கள் தம் கால நிகழ்வுகளை கல்லில் செதுக்கி வைப்பது வழக்கமாகக் கொண்டிருந்தனர். கோயில், குளக்கரை, மலைகள், குகைகள் போன்ற இடங்களில் எழுதப்பட்ட இந்த கல்வெட்டுகள், இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் (Archaeological Survey of India-ASI) மூலமாக கண்டுபிடிக்கப்ப ட்டு 'படி எடுத்தல்' முறையில் காகிதத்தில் நகல் எடுக்கப்படுகிறது. இதை ஆய்வுக்கு பயனுள்ள வகையில் அவ்வப்போது பதிப்பித்து தொகுதிகளாக வெளியிடுகிறது ASI. 


தொப்பை குறைய எளிய பயிற்சி..!

இன்றைய இளைஞர்களை அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது தொப்பை. இந்த தொப்பையை குறைக்க அவர்கள் எந்த விதமான முயற்சியும் எடுக்க நேரம் கிடைப்பதில்லை.

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்..


1.எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் , ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும்.
2.கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில் ,தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும் கணவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தக் கூடாது.
3.மனைவியும் வேலைக்கு செல்லும் வீட்டில், நானும் தான் வேலைக்கு போறேன் என்ற வார்த்தையை மனைவி அடிக்கடி சொல்லக் கூடாது.

இன்சோம்னியா என்னும் தூக்கமின்மையின் அறிகுறிகளும், சிகிச்சைகளும்:-

தூக்கம் வரவில்லை என்று பலர் புலம்புவதை நாம் காணலாம். அது என்றாவது ஒரு நாள் இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் அதுவே தினசரி பழக்கமாக மாறினால்? இன்சோம்னியா (தூக்கமின்மை) என்பது இந்த உலகத்தில் அனைத்து வயதினரும், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு பொதுவான உடல்நல கோளாறாகும். இன்சோம்னியா என்பதற்கு அர்த்தம் என்னவென்று பார்த்தால் சாதாரணமானது தான்; தூக்கமின்மை அல்லது சீரான தூக்கம் கிடைக்காததே அதற்கு அர்த்தமாகும். பல வகை இன்சோம்னியாவால் பல மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். குறுகிய கால இன்சோம்னியா என்றழைக்கப்படும் அக்யூட் இன்சோம்னியா தான் அதிகமானோரை பாதிக்கிறது. போதிய மருந்துகள் உண்டால் அல்லது வாழ்க்கை முறையை சிறிது மாற்றி அமைத்தால், இது சிறிது காலத்தில் தானாகாவே சரியாகிவிடும்.

சார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாறு !!!

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்கள் அப்படிப்பார்த்தால் நம்மை வாய்விட்டு சிரிக்க வைப்பவர்களை மருத்துவர்களுக்கு சமம் என்று சொல்லலாம். உலகில் அதிக மக்களை சிரிக்க வைத்த நபர் யார் என்று கேட்டால் ஒரே ஒரு நபரைத்தான் வரலாறு புன்னைகையுடன் உதிர்க்கும். அவர்தான் ஈடு இணையற்ற ஆங்கில நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின். இன்று திரைப்படங்களில் வசனங்களை கேட்டு சிரிக்கிறோம் ஆனால் ஊமைப்படங்கள் மட்டுமே வெளிவந்த ஒரு கால கட்டத்தில் மொழியின் துணையின்றி வசனம் எதுவும் பேசாமால் தன் உடல் அசைவுகளாலே ரசிகர்களை

ஏழரைச் சனி என்ன செய்யும்?

காலத்தை கி.மு., கி.பி. என வரலாறு பிரிக்கிறது. 
அதுபோல வாழ்க்கையை ஏ.மு., ஏ.பி. என ஜோதிடம் பிரித்துக் காட்டுகிறது. 
அதாவது ஏழரைச் சனிக்கு முன், ஏழரைச் சனிக்குப் பின் என்று வாழ்வு கனிகிறது.
ஏழரைக்குப் பிறகு வரும் தெளிவும், நிதானமும் ஆச்சரியமானது.
முதிர்ந்த வார்த்தைகளால் அனுபவப்பூர்வமாகப் பேச வைக்கிறது.
இந்த ஏழரைச் சனி என்னதான் செய்யும் என்பதை பார்க்கலாம்...
உங்கள் ராசிக்கு முன்னும், உங்கள் ராசிக்குள்ளும், அடுத்துள்ள ராசியிலும் சனி சஞ்சரிக்கும் காலத்தையே ஏழரைச் சனி என்கிறோம். சிறு வயதில் வரும் முதல் சுற்றை மங்கு சனி என்றும், வாலிப மற்றும் மத்திம வயதின்போது வரும் இரண்டாம் சுற்றை பொங்கு சனி என்றும், கொஞ்சம் வயதான காலத்தில் வரும் மூன்றாம் சுற்றை கங்கு சனி என்றும் அழைப்பர்.

Have you been hugged lately? Did you know...

Have you been hugged lately? Did you know...

"The average length of a hug between two people is 3 seconds, but researchers have discovered something fantastic. When a hug lasts 20 seconds, there is a therapeutic effect on the body and mind.

The reason is that a sincere hug produces a hormone called "oxytocin", also known as the love hormone. This substance has many benefits in our physical and mental health, helps us, among other things, to relax, to feel safe and calm our fears and anxiety.

This wonderful calming is offered free of charge every time we have a person in our arms, when we cradled a child, cherish a dog or cat, we're dancing with our partner, the closer we get to someone or just hold the shoulders of a friend."

Try it out and hug a Beloved today!

இந்தியாவில் பயணிக்க அவசியமான ஹிந்திவார்த்தைகள்

இந்தியாவில் பயணிக்க அவசியமான ஹிந்திவார்த்தைகள்
வணக்கம் - நமஸ்தே அல்லது பிரனாம் 
வணக்கம் கான் - நமஸ்தே கான் ஜி
நான் - மே
நான் சென்னையை சேர்ந்தவன் - மே சென்னை சே ஹும்
என்னுடையது - மேரா
இது என்னுடையது - யே மேரா ஹே 

மஞ்சள் பால்...

இயற்கையை மீறி எதுவும் நடக்காது’; `எது நடந்தால் என்ன பார்த்துக் கொள்ளலாம்’ -இவையெல்லாம் கிராமங்களில், நாட்டுப்புறங்களில் பேசப்படும் வழக்கு மொழிகள்.
*விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களும் குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.

நம்மளோட பார்வை பிரச்சினையா கூட இருக்கலாம்.

புதிதாக கல்யாணமான ஒரு கணவனும் மனைவியும் புதிய ஒரு நகரத்துக்கு குடியேறினார்கள்.
அடுத்த நாள் காலையில் இருவரும் ஹாலில் அமர்ந்து காபி குடிக்கும் போது, பக்கத்துக்கு வீட்டு பெண் துணிகளை துவைத்து
காயப்போட்டுக்கொண்டிருப்பது ஜன்னல் வழியாக தெரிந்தது. அதை பார்த்த மனைவி கணவனிடம் ‘அங்க பாருங்க, அந்த பொண்ணுக்கு துவைக்கவே தெரியல. துணியெல்லாம் கருப்பு புள்ளிகளா இருக்கு’ அப்படின்னு சொன்னா.
ஜன்னல் வழியே பார்த்த கணவன் ஒண்ணுமே சொல்லல.
பக்கத்துக்கு வீட்டு பொண்ணு தொவைச்சு காய போடறதும் அத ஜன்னல் வழியா பாத்து மனைவி துவைக்க தெரியலன்னு சொல்றதும், கணவன் அதுக்கு ஒண்ணுமே சொல்லாம இருக்குறதும் ரொம்ப நாளா நடந்துச்சு.
திடீர்னு ஒரு நாள் மனைவி ரொம்ப ஆச்சரியமா சொன்னா: இங்க பாருங்க! கடைசியில நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு துணி துவைக்க படிச்சுட்டா. இன்னைக்கு துணிகளை சுத்தமா துவைசுருக்கா.
அதுக்கு அந்த கணவன்’அது வேற ஒன்னும் இல்ல.
இன்னைக்கு காலையில சீக்கிரமா எழுந்து நம்ம வீடு ஜன்னல் கண்ணாடிகளை எல்லாம் நான் துடைச்சேன்’ அப்படின்னு சொல்லிட்டு காபி குடிக்க ஆரம்பிச்சான்.
இதனால் நான் சொல்ல வர்ற மெசேஜ் என்னானா: அடுத்தவனோட குறைகளா நாம நெனைக்கிறது சில நேரங்களில் நம்மளோட பார்வை பிரச்சினையா கூட இருக்கலாம்.

பல பிரச்சனைகளைத் தவிர்க்கமிகச் சிறந்த ஆயுதம் புன்னகை.

எல்லோரையும் போல் தானும் அழகாக வேண்டும் என்று நினைத்த ஒரு மனிதர் மருத்துவரிடம் சென்று,எல்லோரும் அழகா இருக்காங்க, நா மட்டும் அழகில்லை, மற்றவர்களை விட அழகாக வேண்டும், ஆலோசனை சொல்லுங்கள் என்றார். உடனே"தொப்பையை குறை" என்று மருத்துவர் ஆலோசனை செய்தார். அன்று முதல் தன் Excess sizeஐ Excersie மூலம் குறைத்தார், கரைத்தார். உடம்பு அழகானது, முகம் மட்டும் அழகாக வில்லை.மீண்டும் வருத்தது டன் அந்த ஊரில் உள்ள ஞானியிடம் சென்று, மருத்துவரிடம் சொன்னது போ

பெண்களுக்கு உண்மையை பேசும் ஆண்களைத் தான் பிடிக்கும்

உறவுகளுக்குள் ஏற்படும் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் என்றால் அது பொய் சொல்வது தான். பொதுவாக காதல் செய்யும் போது ஆண்கள் நிறைய பொய் சொல்வார்கள். ஆனால் பெண்களால் காதலன் எப்போதும் பொய் சொல்வதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இதன் காரணமாகவே பல காதல் பாதியிலேயே முறிந்து விடுகிறது. 

நாம் கோபப்பட்டால் பதிலுக்கு கோபம் கிடைக்கும்.



தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது. அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிரிச்சி ஏனெனில் சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன. 

நேர்மறையாக சிந்திக்க கற்றுக் கொள்ள


ஒரு இளம் தம்பதி... மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க் கொண்டிருந்தார்க ள். வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது பேருந்து. ஏனோ வழியில் அவர்கள் இருவரும் இறங்கிக் கொள்ள முடிவு செய்து, பேருந்தை நிறுத்தி இறங்கிக் கொண்டனர்.

மனிதன் வாழ்கிறான்

கடவுள் ஒரு நாள் கழுதையை படைத்து அதனிடம் சொன்னார்,


"நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும் நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல் தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ 50 வருடங்களுக்கு வாழ்வாய்.இதற்கு கழுதை சொன்னது
"நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்."கடவுள் கழுதையின் ஆசையை நிறைவேற்றினார்.அடுத்து ஒரு நாயை படைத்து அதனிடம் சொன்னார்"நீ மனிதனின் வீட்டைகாக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான். நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்."

ஆரத்தி

நம் முன்னோர்கள் கடைப்பிடித்த பாரம்பரிய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் நம் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டவை. ஆனால் நம் தலைமுறை அதை சரியாக உணர்வதில்லை.பழங்காலத்தில் வாழை இலையில் சாப்பிடுவதற்கு முன்னதாக அந்த உணவை நீர் கொண்டு ஆராதித்து விட்டு அதன் பின்னரே சாப்பிடத் துவங்குவர். இதுபோன்று செய்வதால் நாம் உண்ணும் உணவு புனிதப்படுவதாக அவர்கள் நம்பினர்.

மிதமான குடிபழக்கம்

மதுவில் இருந்து முற்றிலும் விலகியிருக்கும் மக்களை விட மதுபானத்தை வழக்கமாக அருந்தும் மக்கள் நீண்டகாலம் வாழ்வார்கள் என்று ஒரு புதிய ஆய்வில் கண்டறிந்துள்ளது. மேலும், மது அருந்தாத மக்களின் இறப்பு விகிதம் அதிகமாக கொண்டிருப்பவர்களாக தோன்றியது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

நாள் ஒன்றுக்கு, ஒன்று முதல் மூன்று பானங்கள் என வரையறுக்கப்பட்ட மிதமான குடிபழக்கம் உள்ள மக்கள் மிகக்குறைந்த இறப்பு விகிதத்தை கொண்டிருப்பார்கள் என்று டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த உளவியலாளர், சார்லஸ் ஹோலஹன், தலைமையிலான அணி ஆய்வில் கண்டறிந்துள்ளனர் என்று 'தி இன்டிபென்டன்ட்' தகவல் அளித்துள்ளது.

ஆய்வில் மது அருந்துபவர்கள் மற்றும் 20 ஆண்டுகளாக அனைத்து சமயத்தின் இறப்புக்கும் இடையே தொடர்பு ஆய்வு ஒன்று அமைக்கப்பட்டது. ஆய்வில், மிதமான மது அருந்தும் மக்களுடன் ஒப்பிடும்போது மதுவில் இருந்து விலகியவர்களுக்கு 2 மடங்கு இறப்பு ஆபத்து அதிகரித்துள்ளது என்றும், அதிகமாக மது அருந்துபவர்களின் இறப்பு ஆபத்து 70% அதிகரித்துள்ளது, மற்றும் லேசாக மது அருந்துபவர்களுக்கு 23% இறப்பு ஆபத்து அதிகரித்துள்ளது என்று கண்டறியப்பட்டது.

குடிப்பழக்கத்தில் இருந்து விலகியவர்கள் மற்றும் அதிக குடிப்பழக்கம் கொண்ட மக்கள் தங்களை மாற்றிக் கொண்ட பின், மிதமான மது அருந்துபவர்களுடன் ஒப்பிடும்போது அவர்களின் இறப்பு அபாயங்கள் 51% மற்றும் 45% அதிகரித்துள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

உங்கள் வீட்டில் கொசு தொல்லையா.?

கொசு ஒரு பிரச்சனையா?
இது 100% வேலை செய்யும்...!
உங்கள் வீட்டிலில்
இருந்து கொசுக்களை விரட்ட
ஒரு சக்திவாய்ந்த நுட்பம்..!

Saturday 1 February 2014

ஆழ்ந்த உறக்கத்துக்கு பூண்டு.....!

வியாதிகளை விரட்டும் வெள்ளைப் பூண்டு இரவு உறங்கச் செல்லும் முன் சூடான பசும்பாலில் இரண்டு பூண்டுப் பற்களைப் போட்டு, அதை உண்டால் உடலுக்கு அதைவிட நலம் சேர்க்கும் விஷயம் வேறு இல்லை.” – பிரபல மருத்துவர்கள் சொன்ன குறிப்பு அல்ல இது. நல்லது கெட்டதுகளின் அனுபவ சாட்சியாய் வாழ்ந்து மறைந்த கவிஞர் கண்ணதாசன் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ நூலில் எழுதி இருக்கும் குறிப்பு இது. ‘பூண்டு கைவசம் இருந்தாப் போருக்கே கிளம்பலாம்’ என்பார்கள் கிராமப்புறங்களில். தன் உடல் செரிமானம், சக்தி, கழிவு நீக்கம் என சகலத்திலும் உடலுக்கு உற்ற துணை புரியும் பூண்டு, மருத்துவ உலகின் வரப்பிரசாதம். சைவம், அசைவம் என எல்லா வகை உணவிலும் பூண்டு தவிர்க்க முடியாதது. பூண்டின் மகத்துவத்தைப் பற்றியும், நோய்களைக் குணப்படுத்த அதைப் பயன்படுத்தும் முறைகள் பற்றியும் விவரிக்கிறார் காரைக்குடி சித்த மருத்துவ மைய சித்த மருத்துவர் சி.சொக்கலிங்கம்.

”பூண்டில் அலிசின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. கழலை, மரு போன்றவற்றை நீக்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது.


வில்வமரம்:

இலைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவை நாம் சாப்பிடதொடங்கும் வரை சுவாசித்துக்கொண்டிருக்கின்றன. அதனால் தான் காற்றுப்புகாத பையில் போட்டு கட்டினால் அவை அழுகிவிடுகின்றன. எனவே அவற்றை உயிருள்ள உணவுகள் என்கிறோம். அந்த உயிர்சத்து தான் நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுகிறது. அனைத்து பாகங்களும் பயன்தரும் பல தாவரங்கள் உள்ளன. அதில் இலை, பூ, காய், பழம், வேர், பிசின், பட்டை அனைத்தும் மருந்தாக பலன்தரும் மணமுடைய இலைகளை பெற்ற முட்கள் உள்ள பெரிய மரம் வில்வம்.



மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடவும்.!!! ???

உடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள் என்று சொன்னால், அது மீன் எண்ணெய் தான் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அனைவருக்குமே உடலை ஆரோக்கியமாக வைக்கும் சிறந்த 5 எண்ணெய் பற்றி தெரியும்.அதிலும் மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது என்றும் அனைவருக்கும் தெரியும்.
அதிலும் மற்ற எண்ணெய்களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் இருக்கும். ஆனால் நிறைய மக்களுக்கு இந்த எண்ணெய் பற்றிய சரியான உண்மைகள் மற்றும் பலன்களைப் பற்றி தெரியாது. நமது முன்னோர்கள் சொல்வார்கள் என்று தான் இன்றும் சாப்பிடுகிறார்களே தவிர, இதனைப் பற்றி முழுவதும் தெரிந்து சாப்பிடவில்லை.ஆகவே இனிமேல் அவ்வாறு தெரியாமல் சாப்பிடாமல், அதைப் பற்றி தெரிந்து கொண்டு பின்பு சாப்பிடுங்கள்.



மீன் எண்ணெய் என்றால் என்ன?
இந்த எண்ணெய் மீனிலிருந்து எடுக்கப்படுகிறது. அதுவும் அதிகமான அளவு கொழுப்புக்கள் உள்ள மீனிலிருந்து மட்டும் தான் எடுக்க முடியும் என்பதில்லை.
இந்த எண்ணெய் பெரியதாக இருக்கும் மீனான திமிங்கலம் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும். இத்தகைய மீனை சமைத்து சாப்பிடமாட்டோம்.
ஆனால் இதில் இருந்து தான் வைட்டமின் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.
மீன் எண்ணெய் என்று கூறியதும், எண்ணெயை குடிக்க முடியாது, அதற்கு பதிலாக கடைகளில் மீன் எண்ணெய் மாத்திரைகள் விற்கப்படும்.

ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைய வேண்டுமா!!! ???

இதோ அட்டகாசமான சில டயட் டிப்ஸ்...
ஏழே நாட்களில் ஏழு கிலோ உடல் எடையை குறைக்க ஆசையா? அது நடக்காது என்று பலர் நினைப்பதுண்டு. ஆனால் சரியான டயட்டை மேற்கொள்வதன் மூலம் நிச்சயம் ஏழே நாட்களில் ஏழு கிலோ உடல் எடையைக் குறைக்கலாம். அதிலும் பலர் இந்த புத்தாண்டில் இருந்து, உடல் எடையை குறைத்து, சிக்கென்று வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதுண்டு. அதற்காக என்ன செய்யலாம் என்று யோசிப்பதுண்டு.


அப்படி நீங்கள் உடல் எடையைக் குறைக்க என்ன செய்ய வேண்டுமென்று யோசித்தால், அட்டகாசமான டயட் டிப்ஸ்களை கடைப்பிடித்து அதன் படி நடந்தால், நிச்சயம் ஏழு நாட்களில் ஏழு கிலோ உடல் எடையைக் குறைக்கலாம்.
இந்த மாதிரி எத்தனையோ உடல் எடை குறைப்பு வழிமுறைகளைப் படித்து பின்பற்றி, அதனால் சிலருக்கு எந்த பலனும் கிடைத்திருக்காமல் இருக்கலாம்.ஆனால் இங்கு குறிப்பிட்டிருப்பது போல் நடந்தால், நிச்சயம் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும்.முக்கியமாக எப்போதும் உடல் எடையை குறைக்க எந்த ஒரு முயற்சியை மேற்கொள்ளும் போதும், அதன் மீது முதலில் மனதில் நம்பிக்கை நம்பிக்கை கொண்டு முயற்சித்தால், நிச்சயம் அதன் பலனைப் பெற முடியும்.