Friday 25 October 2013

போதி தருமன் - ஒரு தமிழனைப் பற்றிய வரலாறு !!!...

சீன வரலாற்றில், ஜப்பானிய வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் ஒரு தமிழனைப் பற்றிய வரலாறு !!!
போதி தருமன் என்பவர் 5ம் நூற்றாண்டை சார்ந்த ஒருபௌத்த மத துறவி ஆவார். தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன் பல்லவ அரசனாக இருந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவதாக கருதப்படுகிறது. புத்த மத குருவாக மாறியபிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி தர்மா அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும் 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.சென் புத்தமதத்தை சீனாவிற்கு கொண்டு சென்ற புகழ் இவரையே சாரும். போதி தருமன் சீனாவில் ஷாலின் குங்ஃபூ என்னும் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் எனக் கருதப்படுகிறார்.

சிவலிங்கத்தின் அர்த்தம்....

ஒவ்வரு குருவும் ஒவ்வரு விதமாக சிவலிங்கத்தின் அர்த்தம் கூறுவார்கள் .



     நாம் வாசியோகத்தின் மூலமாக விந்துவை சக்கரங்களின் வழியாக சுழிமுனைக்கு ஏற்றி அது நாசி துவாரம் வழியாக  உள்நாக்கில் இறங்கும் . இந்த இறங்கும் திரவமே ரசமணி ஆகும் . எப்படி ஆவுடயார் பாகத்தில் லிங்கபாகத்தை மருந்து சாத்தி இணைத்து பின்பு சிவபெருமானாக பார்க்கிறோமோ ,அதை போலவே இந்த திரவமானது உள்நாக்கின் வலியாக இறங்கி பெருநாக்குடன் இணைகிறது .அப்போது நாம் சிவனாகவே மாறுகிறோம் .இதுவே வாசியோகத்தின் இறுதிகட்டம் .



தன்னையறிதல் ........


தன்னையறிதல் என்பது குருவருளின் துனையோடு முயற்சியும், பயிற்சியும் கைகூடியவர்களுக்கு மட்டுமே வாய்த்திடும் அற்புதம். ஐம்புலன்களை நெறிப்படுத்தி, மன இயக்கத்தை ஒழுங்கில் கொண்டு வர முயல்வதே தன்னையறிதலின் அதாரம். மனதை ஒழுங்கில் கொணர்வதும் அதை தக்க வைப்பதும் தொடர் நிகழ்வு ஆகும்.மனம் ஒடுங்கினால் தெளிவுகள் தோன்றி அவை ஒன்றில் நிலைக்கும். அப்போது தோற்ற மயக்கங்கள் விலகும். இத்தனை நாளாக நிலையானதாய் நாம் நினைத்துக் கொண்டிருந்த நிலையற்றவைகளைப் பற்றிய புரிதல்கள் உருவாகும். நம்மில் இருந்து நாம் விலகி நமது நிலையினை தரிசிக்கும் ஒரு படிநிலையாக இதனை சித்தர்கள் கூறியிருக்கின்றனர்.

வாழ்வோம் ஆரோக்கியமாக.







            உடலில் தேக்கி வைக்கப்படும் கழிவுகள் எவ்வகையிலும் வெளியே செல்ல முடியாமல் நாம் மருத்துவம், சிகிச்சை என்ற பெயரில் வைப்பதால் கடைசியாக அந்த கழிவுகளின் தன்மை அதிகரித்து உயிர்க்கொல்லி நோய்களாக கேன்சர் மற்றும் எய்ட்ஸ் போன்ற நோய் வருகிறது. ஆனால் அந்த நோய்கள் வந்த பிறகு இதற்கு காரணம் தெரியவில்லை என்று கூறுகிறோம். தும்மல், மூக்கு ஒழுகுதல், சளி, வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் இவற்றிற்கு யார் யாரெல்லாம் சிகிச்சை என்ற பெயரில் மருத்துவம் பார்க்கிறீர்களோ இதுதான் கேன்சர் எய்ட்ஸ்க்கு அடிப்படை காரணம்.

Thursday 24 October 2013

சிவலிங்க வழிபாடும் அறிவியல் சொல்லும் உண்மையும் !!

சிவலிங்க வழிபாடும் அறிவியல் சொல்லும் உண்மையும் !
உலகின் முதல் கடவுள் சிவன். அவன் தான் எல்லாவற்றிக்கும் மூலம் என்பார்கள் பெரியோர்கள். உருவமில்லா உருவமாக சிவ லிங்கம் வணங்கப்படுகிறது.




உருவ வழிபாடு லிங்கத்திலிருந்தே தொடங்கியிருக்க வேண்டும் என்பது ஆய்வாலர்களின் கருத்து. ஏனென்றால் லிங்கம் ஒரு வகையில் உருவமுடையது. மறுவகையில் உருவமில்லாதது.


கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?




கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)

                         இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா "ஃபாஸ்ட்ஃபுட்" கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்துக் கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.

எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாகச் சொல்கிறேன்.:

வாட்டர் தெரபி சிகிச்சை .....







உடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…


காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதாவது 5 முதல் 6 டம்ளர்கள் வரைத் தண்ணீரைக் குடிக்கவும். அதற்குப் பின் முகத்தைக் கழுவ வேண்டும். இதற்குப் பெயர் தான் வாட்டர் தெரபி என்று பெயர்.

யோகா செய்யும் போது ??......



                                நல்ல காற்றோட்டமான இடத்தை தேர்வு செய்யவும். * சூரிய உதயத்திற்கு முன்னே காலைவேளை மனதிற்கு மிக மிக நல்லது. காலை மெதுவான சூரிய ஒளியில் செய்தாலும் நல்ல பலன் உண்டு. * யோகா செய்யும் போது வயிறு காலியாக இருக்கவேண்டும். எழுந்தவுடன் நிறைய குளிர் தண்ணீர் குடித்துவிட்டு அரைமணி நேரம் கழித்து காலைக்கடனை முடித்துவிட்டு செய்யலாம்.