Friday 25 October 2013

போதி தருமன் - ஒரு தமிழனைப் பற்றிய வரலாறு !!!...

சீன வரலாற்றில், ஜப்பானிய வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் ஒரு தமிழனைப் பற்றிய வரலாறு !!!
போதி தருமன் என்பவர் 5ம் நூற்றாண்டை சார்ந்த ஒருபௌத்த மத துறவி ஆவார். தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன் பல்லவ அரசனாக இருந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவதாக கருதப்படுகிறது. புத்த மத குருவாக மாறியபிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி தர்மா அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும் 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.சென் புத்தமதத்தை சீனாவிற்கு கொண்டு சென்ற புகழ் இவரையே சாரும். போதி தருமன் சீனாவில் ஷாலின் குங்ஃபூ என்னும் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் எனக் கருதப்படுகிறார்.

சிவலிங்கத்தின் அர்த்தம்....

ஒவ்வரு குருவும் ஒவ்வரு விதமாக சிவலிங்கத்தின் அர்த்தம் கூறுவார்கள் .



     நாம் வாசியோகத்தின் மூலமாக விந்துவை சக்கரங்களின் வழியாக சுழிமுனைக்கு ஏற்றி அது நாசி துவாரம் வழியாக  உள்நாக்கில் இறங்கும் . இந்த இறங்கும் திரவமே ரசமணி ஆகும் . எப்படி ஆவுடயார் பாகத்தில் லிங்கபாகத்தை மருந்து சாத்தி இணைத்து பின்பு சிவபெருமானாக பார்க்கிறோமோ ,அதை போலவே இந்த திரவமானது உள்நாக்கின் வலியாக இறங்கி பெருநாக்குடன் இணைகிறது .அப்போது நாம் சிவனாகவே மாறுகிறோம் .இதுவே வாசியோகத்தின் இறுதிகட்டம் .



தன்னையறிதல் ........


தன்னையறிதல் என்பது குருவருளின் துனையோடு முயற்சியும், பயிற்சியும் கைகூடியவர்களுக்கு மட்டுமே வாய்த்திடும் அற்புதம். ஐம்புலன்களை நெறிப்படுத்தி, மன இயக்கத்தை ஒழுங்கில் கொண்டு வர முயல்வதே தன்னையறிதலின் அதாரம். மனதை ஒழுங்கில் கொணர்வதும் அதை தக்க வைப்பதும் தொடர் நிகழ்வு ஆகும்.மனம் ஒடுங்கினால் தெளிவுகள் தோன்றி அவை ஒன்றில் நிலைக்கும். அப்போது தோற்ற மயக்கங்கள் விலகும். இத்தனை நாளாக நிலையானதாய் நாம் நினைத்துக் கொண்டிருந்த நிலையற்றவைகளைப் பற்றிய புரிதல்கள் உருவாகும். நம்மில் இருந்து நாம் விலகி நமது நிலையினை தரிசிக்கும் ஒரு படிநிலையாக இதனை சித்தர்கள் கூறியிருக்கின்றனர்.

வாழ்வோம் ஆரோக்கியமாக.







            உடலில் தேக்கி வைக்கப்படும் கழிவுகள் எவ்வகையிலும் வெளியே செல்ல முடியாமல் நாம் மருத்துவம், சிகிச்சை என்ற பெயரில் வைப்பதால் கடைசியாக அந்த கழிவுகளின் தன்மை அதிகரித்து உயிர்க்கொல்லி நோய்களாக கேன்சர் மற்றும் எய்ட்ஸ் போன்ற நோய் வருகிறது. ஆனால் அந்த நோய்கள் வந்த பிறகு இதற்கு காரணம் தெரியவில்லை என்று கூறுகிறோம். தும்மல், மூக்கு ஒழுகுதல், சளி, வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் இவற்றிற்கு யார் யாரெல்லாம் சிகிச்சை என்ற பெயரில் மருத்துவம் பார்க்கிறீர்களோ இதுதான் கேன்சர் எய்ட்ஸ்க்கு அடிப்படை காரணம்.